கொங்கு வேளாளர் திருமண மங்கலவாழ்த்துகவிச்சக்கிரவர்த்தி கம்பர்
மின்பதிப்பாசிரியர் குறிப்பு: கொங்கு வேளாளர் கலியாணங்களில் நடைபெறும் மிக முக்கியமான சடங்குச்சீர்களில் ஒன்று மங்கலவாழ்த்து. குடிமகன் அல்லது மங்கலன் என்று அன்புடன் அழைக்கப்படும் நாவிதர்குலப் பெருமகன் இதனைப் பாடுவார். ஒவ்வொரு நிகழ்ச்சியாக மங்கலன் சொல்லி நிறுத்தும்போதும் மத்தளத்தில் மேளகாரர் ஒருமுறை தட்டுவார். "இது கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பெருமானால் பாடிக் கொடுக்கப்பட்டதென்று கொங்குநாட்டார் அனைவரும் நம்புகிறார்கள்" என்று 1913-ல் பதிப்பித்த திருச்செங்கோடு அட்டாவதானம் முத்துசாமிக் கோனாரவர்கள் குறிப்பிடுகிறார்கள். திருமண முறைகளை எளிய நாட்டு வழக்கச் சொற்களால் ஒழுங்குபெற அமைத்துப் புலவர்பிரானார் இதனை அருளினர்போலும். அதற்கேற்ப இவ்வாழ்த்தினுள் 'கங்காகுலம் விளங்கக் கம்பர் சொன்ன வாழ்த்துரைத்து' எனவரும் அடியாலும் கம்பர் குலத்தார்கள் அகவலும் தரவும் விரவிவரப் பாடினார்கள் என்று கொள்க. உ
கொங்கு வேளாளர் திருமண மங்கலவாழ்த்து
கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பாடியது
காப்பு வெண்பா
நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரியதும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்நம்பிக்கை உண்டே நமக்கு. அகவல்பா
அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர்திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக்கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்சந்திர சூரியர் தானவர் வானவர்முந்திய தேவர் மூவருங் காத்திடநற்கலி யாணம் நடந்திடும் சீர்தனில்தப்பிதம் இல்லாமல் சரசுவதி காப்பாய்!சீரிய தினைமா தேனுடன் கனிமாபாரிய கதலிப் பழமுடன் இளநீர்சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும் 10
மிக்கதோர் கரும்பு விதவிதக் கிழங்குஎள்அவல் நெற்பொரி இனித்த பாகுடன்பொங்கல் சாதம் பொரிகறி முதலாய்செங்கை யினாலே திரட்டிப் பிசைந்துஆரமுது அருந்தும் அழகு சிறந்தபேழை வயிற்றுப் பெருமதக் களிறேஅடியேன் சொல்லை அவனியில் குறித்துக்கடுகியே வந்தென் கருத்தினில் நின்றுநினைத்த தெல்லாம் நீயே முடித்துமனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்! 20
மங்கல வாழ்த்தை மகிழ்ச்சியாய் ஓதஎன்குரு நாதன் இணையடி போற்றிகிரேதா திரேதா துவாபர கலியுகம்செம்பொன் மகுடம் சேரன் சோழன்பைம்பொன் மாமுடிப் பாண்டியன் என்னும்மூன்று மன்னர் நாட்டை ஆள்கையில்கருவுரு வாகித் திருவதி அவள்புகழ்சிறந்த மானிடம் தாயது கருப்பம்வாழ்வது பொருந்திச் சிறந்திடுங் காலம்இந்திரன் தன்னால் இங்குவந்த நாளில் 30
பக்குவம் ஆகிப் பருவங் கொண்டுதிக்கில் உள்ளோர் சிலருங் கூடிச்சோதிடனை அழைத்துச் சாத்திரங் கேட்டுஇந்த மாப்பிள்ளை பேர்தனைக் கூறிஇந்தப் பெண்ணின் பேர்தனைச் சொல்லிஇருவர் பேரையும் இராசியில் கேட்டுக்கைத்தலம் ஓடிய இரேகைப் பொருத்தம்ஒன்பது பொருத்தம் உண்டெனப் பார்த்துத்தாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டுவாசல் கௌலி வலிதென நிமித்தம் 40
தெளிவுடன் கேட்டுச் சிறியோர் பெரியோர்குறிப்புச் சொல்லும் குறிப்புரை கேட்டுஉத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டுப்பொருந்தி இருத்தலால் பூரித்து மகிழ்ந்துசிலபேர் உடனே சீக்கிரம் புறப்பட்டுவெண்கல முரசம் வீதியில் கொட்டத்தங்க நகரி தானலங் கரித்துமுற்றமும் மனையும் முத்துகள் பரப்பிச்சித்திரக் கூடம் சிறக்க விளக்கிஉரியவர் வந்தார் உன்மகளுக் கென்று 50
பிரியமுடன் வெற்றிலை மடிதனில் கட்டிநாளது குறித்து நல்விருந்து உண்டுபூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்துவாழ்வது மனைக்கு மனமகிழ வந்துமேகற்றோர் புலவர் கணக்கரை அழைத்துத்தேம்பனை யோலை சிறக்கவே வாரித்திசைதிசை எங்கும் தென்னவரை அனுப்பிக்கலியாண நாளைக் கணித்துஅறி வித்தார்பாங்குடன் முகூர்த்தப் பாலக்கால் நாட்டித்தென்னம் குலையும் தேமாங் கொத்தும் 60
பந்தல்கள் எங்கும் பரிவுடன் தூக்கிவாழை கமுகு வளர்கூந் தற்பனைமாவிலைத் தோரணம் மகரத் தோரணம்சோலை இலையால் தோரணங் கட்டிமூத்தோர் வந்து மொழுகி வழித்துப்பார்க்குமிடம் எங்கும் பால்தனைத் தெளித்துப்பெண்டுகள் வழங்கும் பெரிய கலத்தைக்கொண்டு வந்ததனைக் குணமுடன் விளக்கிநேரிய சம்பா அரிசியை நிறைத்துப்பாரிய வெல்லம் பாக்கு வெள்ளிலை 70
சீருடன் நெய்யும் தேங்காய் பழமும்வாரியே வைத்து வரிசை குறையாமல்முறைமை யதாக முக்காலி மேல்வைத்துமணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக்குணம் பொருந்திய குடிமகனை அழைத்துத்தெள்ளிய பாலால் திருமுகம் துடைத்தபின்அரும்பிய மீசையை அழகுற ஒதுக்கிஎழிலுடை கூந்தலுக்கு எண்ணெய் தனையிட்டுக்குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்துஏழு தீர்த்தம் இசைந்திடும் நீரை 80
மேள முடனே விளாவியே வார்த்துச்செந்நெல் சோற்றால் சீக்கடை கழித்துவண்ணப் பட்டுடை வத்திரந் தன்னைநெருங்கக் கொய்து நேர்த்தியாய் உடுத்திமன்னவர் முன்னே வந்தவ ருடனேவாசல் கிளறி மதிப்புடன் கூட்டிச்சாணங் கொண்டு தரைதனை மெழுகிக்கணபதி தன்னைக் கருத்துடன் நாட்டிஅருகது சூடி அருள்பொழிந் திடவேநிரம்பி யதாக நிறைநாழி வைத்து 90
வெற்றிலை பழமும் விருப்புடன் வைத்துஅலைகடல் அமுதம் அவனியின் நீரும்குழவிக்குக் கங்கணம் குணமுடன் தரித்துமுளரி மெச்சிட முகமது விளங்கிடக்களரி வைத்துக் காப்பது கட்டிக்குப்பாரி கொட்டிக் குலதேவதை அழைத்துச்செப்பமுடன் மன்னவற்குத் திருநீறு காப்பணிந்துசாந்து புனுகு சவ்வாது பன்னீரும்சேர்த்துச் சந்தனம் சிறக்கவே பூசிக்கொத்தரளி கொடியரளி கோத்தெடுத்த நல்லரளி 100
முல்லை இருவாச்சி முனைமுறியாச் செண்பகப்பூநாரும் கொழுந்தும் நந்தியா வட்டமும்வேரும் கொழுந்தும் வில்வ பத்திரமும்மருவும் மரிக்கொழுந்தும் வாடாத புட்பங்களும்புன்னை கொன்னை பூக்கள் எல்லாம்கொண்டு வந்து கொண்டை மாலைதண்டை மாலை சோபனச் சுடர்மாலைஆடை ஆபரணம் அலங்கிருதம் மிகச்செய்துதிட்டமுடன் பேழைதனில் சோறுநிறை நாழிவைத்துநட்டுமெட்டுத் தான்முழங்க நாட்டார்தன் நாட்டுக்கல்லை 110
நன்றாய் வலம்வந்து நலமாக நிற்கையிலேசெஞ்சோறு ஐந்துஅடை சிரமதைச் சுற்றித்திட்டி கழித்துச் சிவசூரி யனைத்தொழுதுஅட்டியெங்கும் செய்யாமல் அழகுமனைக்கு வந்துமணவறை அலங்கரித்து மன்னவரைத் தானமர்த்திஇணையான தங்கையரை ஏந்திழையைத் தானழைத்துச்மந்தாரை மல்லிகை மருக்கொழுந்து மாலையிட்டுஆடை ஆபரணம் அழகுறத் தான்பூண்டுகூறை மடித்துவைத்துக் குணமுள்ள மங்கையவள்பேழைமூடி தான்சுமந்து பிறந்தவனைச் சுற்றிவந்து 120
பேழைதனை இறக்கிவைத்துப் பிறந்தவளை அதில்நிறுத்திகூறைச்சேலைத் தலைப்பைக் கொப்பனையாள் கைப்பிடித்துமாப்பிள்ளை கக்கத்தில் மறுமுனையைத் தான்கொடுத்துஅருமைப் பெரியவர் அழகுமாப் பிள்ளைகையைஅரிசியில் பதியம்வைத்து ஐங்கரனைப் பூசித்துமங்கல வாழ்த்துக்கூற மணவறையில் குடிமகனுக்குச்செங்கையால் அரிசியள்ளிச் சிறக்கக் கொடுத்திடுவார்வேழ முகத்து விநாயகர் தாள்பணிந்துசந்திரரும் சூரியரும் சபையோர்கள் தானறியஇந்திரனார் தங்கை இணையோங்க வந்தபின்பு 130
அடைக்காயும் வெற்றிலையும் அடிமடியிற் கட்டியபின்முன்னர் ஒருதரம் விநாயகருக்கு இணைநோக்கிப்பின்னர் ஒருதரம் பிறந்தவர்க்கு இணைநோக்கிஇந்திரனார் தங்கை இணையோங்கி நின்றபின்புதேங்காய் முகூர்த்தமிட்டுச் செல்ல விநாயகனைப்பாங்காய்க் கைதொழுது பாரிகொள்ளப் போறமென்றுமாதா வுடனே மகனாரும் வந்திறங்கிப்போதவே பால்வார்த்துப் போசனமும் தான்அருந்தித்தாயாருடை பாதம் தலைகுனிந்து தண்டனிடப்போய்வா மகனேஎன்றார் பூங்கொடிக்கு மாலையிடப் 140
பயணமென்று முரசுகொட்டப் பாரிலுள்ள மன்னவர்கள்மதகரி அலங்கரித்து மன்னவர்கள் ஏறிவரத்தந்தை யானவர் தண்டிகை மேல்வரத்தமையன் ஆனவர் யானையின் மேல்வரநாடியே வந்தவர்கள் நட்சத்திரம் போல்வரத்தேடியே வந்தவர்கள் தேரரசர் போல்வரப்பேரணி முழங்க பெரிய நகாரடிக்கப்பூமிதான் அதிர புல்லாங்குழல் ஊதஎக்காளம் சின்னம் இடிமுரசு பெருமேளம்கைத்தாளம் பம்பை கனதப்புத் தான்முழங்கச் 150
சேகண்டி திமிர்தாளம் சிறுதவண்டை ஓசையெழத்துத்தாரி நாகசுரம் சோடிகொம்பு தானூதவலம்புரிச் சங்கநாதம் வகையாய் ஊதிவரஉருமேளம் பறைமேளம் உரம்பை திடும்படிக்கப்பலபல விதமான பக்கவாத்திய முழங்கப்பல்லக்கு முன்னடக்கப் பரிசுகள் பறந்துவரவெள்ளைக்குடை வெண்கவரி வீதியில் வீசிவரச்சுருட்டி சூரியவாணம் தீவட்டி முன்னடக்கஇடக்கை வலக்கை இனத்தார்கள் சூழ்ந்துவரக்குதிரை மீதிவர்ந்து குணமுள்ள மாப்பிள்ளை 160
சேனைகள் முன்னே சிறந்து முன்னடக்கக்கட்டியங்கள் கூறிக் கவிவாணர் பாடிவரநாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தேவடியாள்பாகமாஞ் சீலைப் பந்தம் பிடித்திடமேகவண்ணச் சேலை மின்னல்போல் பொன்னிலங்கஅடியாள் ஆயிரம்பேர் ஆலத்தி ஏந்திவரப்பெண்ணு வீட்டார் பிரியமுடன் எதிர்வந்துமன்னவர் தங்களை வாருங்கள் என்றழைத்துஎதிர்ப்பந் தத்துடன் எதிர்மேளம் முழங்கஉடந்தையாய் அழைக்க ஒருமன தாகிப் 170
பந்து சனங்கள் பண்புமித் திரர்வரவந்தனை ஆன வாத்தியம் ஒலிக்கப்பட்டன் புலவன் பண்பாடி தக்கைகொட்டிதிட்டமாஞ் சோபனஞ் செப்பிமுன் னேவரஅரம்பை மேனகை அணிமிகும் திலோத்தமைதிறம்பெறும் ஊர்வசித் தெரிவையர்க்கு ஒப்பாய்வண்மைசேர் கூத்தி வகைபெற நின்றுநன்மைசேர் பரத நாட்டியம் ஆடிடவெகுசனத் துடனே விடுதியில் இறங்கிவாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்பும்என்றார் 180
நாழியரசிக் கூடை நன்றாக முன்னனுப்பிப்பொன்பூட்டப் போகிறவர் பேடை மயிலிக்குநல்ல முகூர்த்தம் நலமுடன் தான்பார்த்துப்பெட்டிகளும் பேழைகளும் பொன்னும் சீப்பும்பட்டுத்துணி நகையும் பார்க்கக் கண்ணாடியும்சத்துச் சரப்பணி தங்கம்பொன் வெள்ளிநகைமுத்துச் சரப்பணி மோகன மாலைகளும்திட்டமுள்ள மங்கையர்க்குத் திருப்பூட்டப் போறமென்றுஅட்டதிக்கும் தானதிர அடியுமென்றார் பேரிகையைஅருமைப் பெரியவரும் அன்ன நடையாரும் 190
பெருகும் வளைக்கையால் பேழைமுடி ஏந்திநின்றுஇன்னுஞ்சில பெண்கள் இவர்களைச் சூழ்ந்துவரச்சென்றுஉட் புகுந்தார்கள் திருப்பெண்ணாள் மாளிகையில்கொண்டுவந்த அணிகலனைக் கோதையர்க்கு முன்வைக்கக்கண்டுமனம் மகிழ்ந்தார்கள் கன்னியர்கள் எல்லோரும்நாட்டில்உள்ள சீர்சிறப்பு நாங்கள் கொண்டுவந்தோம்பூட்டுமென்றார் தோடெடுத்துப் பொன்னவளின் திருக்காதில்அடைக்காயும் வெற்றிலையும் அன்பாக மடியில்கட்டிஆணிப் பொன்னாளை அலங்கரித்துக் குலங்கோதிச்சாந்துப் பொட்டிட்டுச் சவ்வாது மிகப்பூசி 200
ஊட்டுமென்றார் நல்லுணவை உடுத்துமென்றார் பட்டாடைபொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான்படைத்துஅன்பாக வெற்றிலை அடைக்காயும் தான்கொடுத்தார்தாய்மாமன் தன்னைத் தன்மையுடன் அழைத்துசந்தனம் மிகப்பூசிச் சரிகைவேட்டி தான்கொடுத்துப்பொட்டிட்டுப் பொன்முடிந்து பேடை மயிலாட்குப்பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தானறியஆரணங்குப் பெண்ணை அலங்கிருதம் மிகச்செய்துமாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்துவலமதாய் வந்து நலமதாய் நின்று 210
செஞ்சோறு ஐந்துஅடை சிரம்கால் தோளில்வைத்துநிறைநாழி சுற்றியே நீக்கித் திட்டிகழித்துஅட்டியங்கள் செய்யாமல் அழகு மனைக்குவந்துமங்கள கலியாண மணவறையை அலங்கரித்துஅத்தியடித் துத்திப்பட்டு அனந்த நாராயணப்பட்டுபஞ்சவண்ண நிறச்சேலை பவளவண்ணக் கண்டாங்கிமாந்துளிர்சேர் பூங்கொத்து வண்ணமுள்ள பட்டாடைமேலான வெள்ளைப்பட்டு மேற்கட்டுங் கட்டிஉள்ளஅருமையுள்ள வாசலிலே அனைவோரும் வந்திறங்கிப்பொறுமையுள்ள வாசல்தனைப் பூவால் அலங்கரித்துச் 220
சேரசோழ பாண்டியர்கள் சேர்ந்திருக்கும் வாசலிலேசெம்பொன் மிகுந்தோர்கள் சிறந்திருக்கும் வாசலிலேவீர இலக்குமி விளங்கிடும் வாசலிலேவிருதுகள் வழங்கிடும் விருப்பமுள்ள வாசலிலேதரணியில் அன்னக்கொடி தழைத்திருக்கும் வாசலிலேபன்னீரா யிரம்பேர் பலர்சேர்ந்த வாசலிலேநாட்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டுப்பேய்க்கரும்பை நாட்டிப் பிறைமண்ணும் தான்போட்டுச்சாலுங் கரகமும் சந்திர சூரியரும்அம்மி வலமாக அரசாணி முன்பாக 230
ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாகச்சுத்தமுடன் கலம்விளக்கிச் சோறரிசி பால்பழமும்பத்தியுடன் அத்தனையும் பாரித்தார் மணவறையில்மணவறை அலங்கரித்து மணவாளனை அங்கிருத்திஅழகுள்ள மணப்பெண்ணை அலங்காரம் பலசெய்துமாமன் எடுத்து மணவறை சுற்றிவந்துமகிழ்ச்சியது மீதூற வலதுபுறம் தானிருத்திக்குலம்பெரிய மன்னவர்கள் குவலயத்தார் சூழ்ந்திருக்கஇராமன் இவரோ! இலக்குமணன் இவரோ!கண்ணன், இந்திரன், காமன் இவர்தானோ! 240
கார்முகில் இவரோ! காங்கேயன் இவர்தானோ!என்றே பாரிலுள்ளார் ஏத்திப் பாராட்டஅத்தை மகள்தனை அழகுச் செல்வியைமுத்து இரத்தினத்தை முக்காலிமேல் இருத்திக்கணபதி முன்பாகக் கட்டும்மங் கிலியம்வைத்துஅருமைப் பெரியவர் அன்புடன் வழிபட்டுமாப்பிள்ளை பெண்ணை மணவறையில் எதிர்நிறுத்திக்கெட்டிமேளம் சங்குநாதம் கிடுகிடென்று கொட்டியார்ப்பமாணிக்க மாங்கல்ய வைடூர்யத் திருப்பூட்டிமாலைதனை மாற்றி மணவறையில் அமர்ந்தபின்னே 250
மாப்பிள்ளைக்கு மைத்துனரை வாவெனத் தானழைத்துக்கலம்பெரிய அரிசிதனில் கைகோர்வை தானுமிட்டுச்சிங்கார மானபெரும் தெய்வச் சபைதனிலேகங்காகுலம் விளங்கக் கம்பர்சொன்ன வாழ்த்துரைத்துமங்கலமும் கன்னிசொல்ல வாத்தியமெலாம் மடக்கிமறையோர் வேதம்ஓத மற்றவர் ஆசிகூறப்பிறைஆயிரம் தொழுது பிள்ளையார்க்குப் பூசைசெய்துஅருமைப் பெரியோர் அருகுமணம் செய்தபின்னர்கைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்துத்தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன்கொடுத்து 260
உரியதோர் பாட்டன் இருவருடை கைதனிலேதண்ணீர் ஊற்றியே தாரையும் வார்த்தபின்புபிரியமுள்ள மணவறையைப் பின்னும் சுற்றிவந்துசெங்கை யினாலே சிகப்பிட்டு இருவருக்கும்மங்கலக் கலியாணம் வகையாய் முடிந்ததென்றுசாப்பாடு போசனம் சந்தோச மாய்ப்போடஉண்டு பசியாறி உறவுமுறை எல்லோரும்கொண்டுவந்த பொன்முடிப்பைக் கொடுத்துச் செலுத்துமென்றார்மண்டலத்தோர் எல்லோரும் மணப்பந்தலில் இருந்துகலியாணத்தார் தம்மைக் கருத்துடனே அழைத்து 270
கண்ணாளர் தமையழைத்துப் பொன்னோட்டம் காணுமென்றார்அப்போது கண்ணாளர் அவ்விடமே தானிருந்துபணமது பார்த்துக் குணமது ஏற்றுக்கல்லு வராகன் கருவூர்ப் பணமும்வெள்ளைப் புள்ளடி வேற்றூர் நாணயம்சம்மன் கட்டி சாத்தூர் தேவன்உரிக்காசுப் பணம் உயர்ந்த தேவராயர்ஆண்மாடை பெண்மாடை அரியதோர் பொற்காசுஒருவிழி விழிக்க ஒருவிழி பிதுங்கப்பலவகை நாணயமும் பாங்காய்த் தெரிந்து 280
முன்னூறு பொன்முடிப்பு ஒன்றாய் முடிந்தவுடன்பாட்டன் இருந்து பரியம் செலுத்தினார்பந்தல் பல்லி பாக்கியம் உரைக்கமச்சினன் மார்கள் மகிழ்ந்து சூழ்ந்திருக்கச்சிற்றடிப் பெண்கள் சீர்கள் சுமந்துவரச்சந்தோ சமாகித் தங்கமுடி மன்னவர்கள்பந்தச் செலவு பலபேர்க்கும் ஈந்தார்கள்ஆடுவான் பாடுவான் ஆலாத்தி யுட்படநாடிவந்த பேர்களுக்கு நல்ல மனதுடனேதனிப்பணம் தான்கொடுத்துத் தங்கிஇரும் என்றார் 290
வாழிப் புலவர்க்கு வரிசைதனைக் கொடுத்துத்திடமுள்ள பந்தல்கீழ் வந்துநின்ற பேர்களுக்குஅரிசி அளந்தார்கள் அனைவோரும் தானறியகரகம் இறக்கிவைத்துக் கன்னி மணவாளனுக்கும்புடவைதனைக் கொடுத்துப் பொற்பாய்த் தலைமுழுகிச்சட்டுவச் சாதம் தளிர்க்கரத்தால் மாப்பிள்ளைக்குஇல்லத்தாள் பரிமாறி இனிதுண்டு இளைப்பாறிப்பண்ணை மாதிகனைப் பண்பாகத் தானழைத்துவில்லை மிதியடிகள் மிகவே தொட்டபின்புகாலும் விளங்கக் கன்னியைத் தானழைத்து 300
மஞ்சள் நீராட்டி மறுக்கஇரு அழைப்பழைத்துமாமன் மார்களுக்கு மகத்தான விருந்துவைத்துமங்கல சோபனம் வகையாய் முடிந்தவுடன்மாமன் கொடுக்கும் வரிசைதனைக் கேளீர்துப்பட்டு சால்வை சோமன் உருமாலைபஞ்சவண்ணக் கண்டாங்கி பவளநிறப் பட்டாடைஅத்தியடித் துத்திப்பட்டு ஆனையடிக் கண்டாங்கிஇந்திர வண்ணப்பட்டு ஏகாந்த நீலவண்ணம்முறுக்கு வளையல்களும் முகமுள்ள கொலுசுகளும்பதக்கம் சரப்பணி பகட்டான காசுமாலை 310
கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணையும்வட்டில் செம்பும் வழங்கும் பொருள்களும்காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்குதிரையுடன் பல்லாக்கு குறையாத பலபண்டம்நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர் தானறிய!எல்லாச் சீரும் இயல்புடன் கொடுத்துஅடைவுடன் வரிசைபெற்ற அழகு மணவாளன்மக்கள்பதி னாறும்பெற்று மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்க!வாழி மணமக்கள் வந்தவர்கள் வாழ்த்துரைக்க!
ஆல்போல் தழைதழைத்து, அருகுபோல் வேர்ஊன்றி,மூங்கில்போல் கிளைகிளைத்து, முசியாமல் வாழ்ந்திருக்க! 321 வாழ்த்துரை
ஆதி கணேசன் அன்புடன் வாழி!
வெற்றி வேல்கொண்ட வேலவன் வாழி!
எம்பெரு மானின் இணையடி வாழி!
மாது உமையவள் மகிழ்வுடன் வாழி!
திருவுடன் பெருமாள் சேவடி வாழி!
முப்பத்து முக்கோடித் தேவரும் வாழி
நாற்பத் தெண்ணாயிரம் ரிசிகளும் வாழி!
வேதம் ஓதிடும் வேதியர் வாழி!
பாரத தேசம் பண்புடன் வாழி!
கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி!
காராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி!
வேளாள குலதிலகர் வேளாண்மை வாழி!
மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி!
வாழிய யானும் மகிழ்வுடன் வாழி!
என்குரு கம்பர் இணையடி வாழி!
வையத்து மக்கள் மற்றவரும் வாழி!
வாழி மணமக்கள் வந்தோர் வாழ்த்துரைக்க!
இப்பாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே!
[மின்பதிப்பாசிரியர் குறிப்பு: கொங்கு வேளாளர் கலியாணங்களில் நடைபெறும் மிக முக்கியமான சடங்குச்சீர்களில் ஒன்று மங்கலவாழ்த்து. குடிமகன் அல்லது மங்கலன் என்று அன்புடன் அழைக்கப்படும் நாவிதர்குலப் பெருமகன் இதனைப் பாடுவார். ஒவ்வொரு நிகழ்ச்சியாக மங்கலன் சொல்லி நிறுத்தும்போதும் மத்தளத்தில் மேளகாரர் ஒருமுறை தட்டுவார். "இது கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பெருமானால் பாடிக் கொடுக்கப்பட்டதென்று கொங்குநாட்டார் அனைவரும் நம்புகிறார்கள்" என்று 1913-ல் பதிப்பித்த திருச்செங்கோடு அட்டாவதானம் முத்துசாமிக் கோனாரவர்கள் குறிப்பிடுகிறார்கள். திருமண முறைகளை எளிய நாட்டு வழக்கச் சொற்களால் ஒழுங்குபெற அமைத்துப் புலவர்பிரானார் இதனை அருளினர்போலும். அதற்கேற்ப இவ்வாழ்த்தினுள் 'கங்காகுலம் விளங்கக் கம்பர் சொன்ன வாழ்த்துரைத்து' எனவரும் அடியாலும் கம்பர் குலத்தார்கள் அகவலும் தரவும் விரவிவரப் பாடினார்கள் என்று கொள்க. பதிப்பாதாரங்கள்: (அ) தி. அ. முத்துசாமிக்கோனார், கவிச்சக்கிரவர்த்தியாகிய கம்பர் இயற்றிய மங்கல வாழ்த்து, வாழி. விவேகதிவாகரன் அச்சுக்கூடம், சேலம், 1913 (ஆ) எஸ். ஏ. ஆர். சின்னுசாமி கவுண்டர், கொங்கு வேளாளர் புராண வரலாறு, தமிழன் அச்சகம், ஈரோடு, 1963. ~ முனைவர் நா. கணேசன்]
Tuesday, December 9, 2008
கொங்கு மங்கள வாழ்த்து
Posted by தங்கமணி at 9:05 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment