இனிய குடியரசு தின நல்வாழ்த்து THANGAMANI DHARMALINGAM THANGAMANI DHARMALINGAM THANGAMANI DHARMALINGAM தங்கமணி »

Wednesday, December 10, 2008

கொங்கு வெள்ளாளர் வரலாறு

கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர். பொதுவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் குடியேறி வசிக்கின்றனர்.
இவர்களின் தொழில் விவசாயம். கடும் உழைப்பாளிகளான இவர்கள் காடுகளை சீர் செய்து விவசாய நிலங்களாக்கினர். தற்போது விவசாயம் அல்லாமல் தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.
பொருளடக்கம்
1 சமுதாய அமைப்பு
2 திருமண முறை
2.1 முதல் நாள்
2.2 இரண்டாம் நாள்
2.2.1 கங்கணம் கட்டுதல்
2.2.2 நிறைநாழி செய்தல்
2.2.3 இணைச்சீர்
2.3 மூன்றாம் நாள்
3 குலம் அல்லது கூட்டம் பட்டியல்

சமுதாய அமைப்பு
இவர்கள் பல குலங்களாக/ கூட்டங்களாகப் பிரிந்துள்ளனர். ஓரே குலத்தை அல்லது கூட்டத்தை சேர்ந்தவர்கள் பங்காளிகள். இவர்களுக்குள் அதாவது பங்காளிகளுக்குள் திருமண உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

திருமண முறை
பிறமொழிக் கலப்பு இன்றியே கொங்கு வேளாளர் மணவினைகள் காலங்காலமாய் நிகழுகின்றன. இந்தச் சிறப்பைத் தமிழகத்தின் பிறபகுதித் திருமணங்களில் காணுதல் அருமை. கொங்கு வேளாள இனத்தை சேர்ந்த 'அருமைப்பெரியவர்' என்பவர் திருமணத்தை நடத்துவார். இவரை அருமைக்காரர் என்றும் அழைப்பர். அருமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும். அவரவர் தேவைக்கேற்ப கொங்கு சிவபிராமணர்களையும், குலகுருக்களையும் மங்கிலியம் என்ற தாலிபூட்டும் பொழுது வைப்பதாக கொங்கு மங்கல வாழ்த்திலுள்ளது.
கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

கொங்கு மங்கலவாழ்த்து
நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரியதும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்நம்பிக்கை உண்டே நமக்கு.
என்று அது தொடங்கும்.
திருமணம் மூன்று நாட்கள் நடக்கும். திருமணம் பெண் வீட்டில் நடக்கும்.

முதல் நாள்
நாள் விருந்து இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள்.

இரண்டாம் நாள்
கலியாண நாள் அல்லது முகூர்த்த கால். இன்று நாள் விருந்தன்று கட்டிய பந்தலில் வாழை, தென்னங்குருத்தோலை முதலியவற்றை கட்டுவர். அருமைப்பெரியவருடன் மூவர் சென்று முகூர்த்த கால் வெட்டி வருவர். முகூர்த்த காலாகப் பால் மரத்தில் முக்கொம்பு கிளை வெட்டப்படும். பொதுவாக ஆல மரம், அரச மரம், பாலை மரங்களில் இது வெட்டப்படும். காலை முதல் மாலை வரை விருந்து நடைபெரும் ஆனால் மணமக்கள் அன்று காலை முதல் விரதம் இருப்பர்.
இரவில் மங்கல நீராடிய பின்னரே மணமக்கள் விரத உணவு உண்பர். இரவு விருந்துக்குப் பின் பச்சைப் பந்தலில் சனி மூலையில் காலையில் வெட்டி வந்திருந்த முகூர்த்தக்காலை நடுவார்கள். நவதானியங்களை காசுடன் சேர்த்து அதில் முடிச்சிட்டு செஞ்சாந்து, மஞ்சள் பூசி முகூர்த்தக்காலில் வைப்பர். முகூர்த்தக்காலிட்டப்பின்னரே மற்ற சடங்குகளை செய்வர்.

கங்கணம் கட்டுதல்
அருமைப்பெரியவர் கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார்.

நிறைநாழி செய்தல்
வட்ட வடிவிலான இரும்புப் படியில் நெல்லை நிறைத்து, நூல் சுற்றிய இரட்டைக்கதிரை அதில் பதித்து வைப்பர். இது நிறைநாழி எனப்படும். இதனை ஒரு பேழையில் வைப்பர், அருமைக்காரர் செய்யும் ஒவ்வொரு பூசையின் போதும் இதனை எடுத்து சுற்றிக்காட்டுவார்.

இணைச்சீர்
இது மணமகன் வீட்டில் மட்டும் நடைபெறும் முக்கியச் சடங்காகும். மணமகனின் சகோதரி இதில் முக்கிய பங்கு வகிப்பவர். இவர் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருப்பார், இவர் சும்மாட்டின் மீது மூங்கில்களால் வேயப்பட்ட பேழைமூடியை சுமந்து வருவார். இதனுல் தாலியும் குழவிக்கல்லும் இருக்கும். சொம்பு நீரைக் கொடுத்து அருமைக்காரி இவரை அழைத்து வருவார். அருமைக்காரர் வெற்றிலை பாக்கு கொடுத்து மடியில் கட்டிக்க சொல்லுவார். பின் கூறைச்சேலையை கொசுவ மடிப்பில் மடித்து ஒரு புறத்தை மணமகன் கக்கத்திலும் மறுபுறத்தை சகோதரி கையிலும் அருமைக்காரர் கொடுப்பார். பின் இருவருக்கும் அருகு மணம் செய்து வைத்து இருவரையும் திருமண வீட்டிற்குள் அனுப்பி வைப்பார். இணைச்சீரின் போது இணைச்சீர்காரி (சகோதரி) கொண்டு வரும் கூறைப்புடவையை தான் முகூர்த்தத்தின் போது மணப்பெண் அணிந்து வரவேண்டும்.
மணமகன் மணமகள் வீடு செல்லும் முன் நாட்டார் கல்லை மேள தாளங்கள் முழங்க வலம் வந்து மரியாதை செலுத்துவார். தாயை வணங்கி சீர் கூடையுடன் சுற்றம் சூழ ஊர்வலமாக மணமகள் ஊரை அடைந்து அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர். மணமகன் வீட்டார் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் சுற்றம் சூழ மேள தாளங்களுடன் சென்று மணமகன் வீட்டாரை வரவேற்று, மணவீடு அருகே அமைந்துள்ள மணமகன் அறையில் மணமகனை தங்க வைப்பர்.

மூன்றாம் நாள்
முகூர்த்தம் இதை தாலி கட்டு என்றும் அழைப்பர். அருமைக்காரர் வாழ்த்து பாடி தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு மங்கல் நாணை கட்டுவார்.

குலம் அல்லது கூட்டம் பட்டியல்
முதன்மைக் கட்டுரை: கொங்கு வேளாளர் கூட்டங்கள்
கொங்கு வேளாளர் கூட்டப் பிரிவுகள் (அல்லது குலப்பிரிவுகள்) நூற்றுக்கும் மேற்பட்டவை எனக் கூறுவர். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உதிரத்தவர் என்பதால் பெண் கொள்வதில்லை.
அகினி
அன‌ங‌ன்
அந்துவ‌ன்
ஆதித்ர்ய கும்பன்
ஆடை
ஆதி
ஆதிரை
ஆவ‌ன்
ஆந்தை
ஆரியன்
அழகன்
பரத‌ன்
ப்ரம்மன்
செல்லம்
தேவேந்தரன்
தனஜயன்
தனவந்தன்
ஈன்சென்
என்னை
இந்தரன்
காடன்
காடை‍
காரி
காவலர்
கடுந்துவி
கலிஞி
கம்பன்
கனவாலன்
கண்ணன்
கன்னாந்தை
கருன்கண்ணன்
கௌரி
காவலன்
கிளியன்
கீரன்
கோடரஙி
கூரை
குருப்பன்
கொட்ராந்தை
கொட்டாரர்
கோவர்
கோவேந்தர்
குமராந்தை
குண்டலி
குண்குலி
குனியன்
குனுக்கன்
குயிலன்
குழயான்
மாடை
மாதமன்
மாதுலி
மாவலர்
மணியன்
மயிலன்
மழ்உழகர்
மெதி
மீனவன்
மொய்ம்பன்
மூலன்
மூரியன்
முக்கண்ணன்
முனைவீரன்
முத்தன்
முழுகாதன்
நாரை
நந்தன்
நீலன்
நெட்டை மணியன்
நீருன்னி
நெய்தாலி
நெரியன்
ஓதாலர்
ஒழுக்கர்
பாலியன்
பாம்பன்
பானன்
பாண்டியன்
பாதாரய்
பதுமன்
படுகுன்னி
பைதாலி
பனையன்
பனங்காடன்
பஞ்சமன்
பன்னை
பன்னன்
பாமரன்
பவளன்
பயிரன்
பெரியன்
பெருங்குடி
பிள்ளன்
பொடியன்
பொன்னன்
பூச்சாதை
பூதியன்
பூசன்
பொருள்தந்தான்
புன்னை
புதன்
சாத்தாந்தை
சத்துவராயன்
சனகன்
சேடன்
செல்லன்
செம்பொன்
செம்பூத்தான்
செம்வன்
செங்க‌ன்னன்
செங்குன்னி
சேரலன்
சேரன்
சேவடி
செவ்வயன்
சிலம்பன்
சோமன்
சூலன்
சூரியன்
சோதி
செளரியன்
சுரபி
தனக்கவன்
தவளையன்
தளிஞ்சி
தேமான்
தோடை
தூரன்
தொரக்கன்
தன்டுமன்
உவனன்
வாணன்
வணக்கன்
வெளையன்
வெளம்பன்
வெந்தை
வெந்துவன்
விளியன்
வில்லி
விளோசனன்
விரதன்
விரைவுளன்
( 150 க்கும் மேற்பட்ட கூட்டங்கள் உள்ளன
அன்புடன்
தங்கமணி
பட்லூர் .
நன்றீ :தமிழ் விக்கிபீடியா

0 comments: